அறிவியலில் ஒரு புரட்சி வந்த காலம்,எனபது 16 மற்றும் 17 ம் நூற்றாண்டுக் காலம்தான். அது வரை இருந்த காலம் அறிவியலின் இருண்ட காலம் என்றே அழைக்கப்பட்டது. நவீன அறிவியல் மற்றும் அறிவியலின் வழிமுறைகள் அப்போதுதான் பிறப்பெடுத்தன.இயற்பியல் உலகைப் பற்றி சிந்திக்கத் துவங்கினர் பழங்கால கிரேக்கம், அரபியா, மத்திய ஐரோப்பிய தத்துவ வாதிகளுக்கு, அறிவியல் வழி முறைகளை விளக்கும் போதுமான சோதனைக் கூடங்களோ அவற்றைச் சோதித்துப் பார்க்கும் கருவிகளோ,இல்லை. எனவே அவற்றை எப்படி விளக்குவது என்ற வழியும் அவர்களுக்கு சரியாகத் தெரியவில்லை. 17