நம்மைச் சுற்றிலும் நடக்கும் அரசியல் அசிங்கங்கள் மனிதர்களின் மோசமான பக்கத்தைக் காட்டுகின்றன என்றால் தற்போதைய ஈர்ப்பலைகளின் கண்டுபிடிப்போ மனிதர்களின் மகத்துவத்தைக் காட்டுகிறது. கிட்டத்தட்ட திறப்பதற்கே வாய்ப்பில்லாத பிரபஞ்சத்தின் ஜன்னல் கதவுகளை விஞ்ஞானிகள் திறந்திருக்கிறார்கள். வரலாறு நெடுக இந்தப் பிரபஞ்சத்தை உற்றுநோக்குவதற்கான விழிகளை நாம் புதிதாக உருவாக்கிக்கொண்டே இருக்கிறோம். அப்போதெல்லாம் நம்மைப் பற்றியும், நாம் வாழும் இவ்வுலகைப் பற்றியும் நாம் கொண்டிருக்கும் எண்ணங்கள் அடியோடு மாறிக்கொண்டேவருகின்றன. வியாழன் கோளை நோக்கி 1609-ல் கலிலியோ தனது தொலைநோக்கியைத் திருப்பியபோது அந்த