புதிய கல்விக் கொள்கையின் நகல் அறிக்கை, தாய்மொழி வழிக் கல்வி குறித்தும், அதன் முக்கியத்துவம் பற்றியும் மிகச் சரியாகவே இனம் கண்டிருக்கிறது. ஆனால், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே தாய்மொழி வழிக்கல்வி என்று வரம்பு விதிக்கிறது. உயர் கல்வியும் தாய்மொழியில் அல்லது மாநில மொழியில் இருந்தாக வேண்டும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆவணத்தில், மக்களின் மொழிகளில் உயர் கல்வி குறித்து இந்த அறிக்கையில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்பது பெரும் குறை. மக்களின் தாய்மொழிகளில் உயர்