புதுச்சேரிக்கு தண்ணீர் பஞ்சம் வருமா ?

BY IN Article NO COMMENTS YET , , , ,

“கிணறு காயும் வரை தண்ணீரைப் பற்றி சிந்திப்பதில்லை” என்பது பழமொழி. தற்போது பெரும்பாலான கிணறுகள், குளங்கள், ஏரிகள் என அனைத்தும் காய்ந்து போய்விட்டன. அதுமட்டுமல்ல , இவை அனைத்தும் வீட்டுமனைகளாக, பேருந்து நிறுத்துமிடங்களாக, விவசாய நிலங்களாக, இப்படி பலவகையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நீர் உறிஞ்சப்பட்டதில் நிலத்தடி நீர்மட்டமும் எட்டாத இடத்திற்கு சென்றுகொண்டிருக்கிறது. ஆனால் இன்னமும் தண்ணீரைப் பற்றி தீவிர மாக சிந்திக்காதவர்களாக நாம் இருக்கிறோம். மத்திய மாநில அரசுகள் இதை உணர்ந்திருந்தாலும் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் இன்னும் தொடக்கத்திலேயே

CONTINUE READING …

தண்ணீர்ப் பஞ்சம்: யாரும் மிஞ்சப் போவதில்லை!

BY IN Article NO COMMENTS YET , , , ,

கிட்டத்தட்ட 400 கோடி பேர், அல்லது உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு பேர்! ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ஒரு மாதமாவது கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறையை எதிர்கொள்பவர்களின் எண்ணிக்கைதான் இது! இதில் 200 கோடி பேர் இந்தியா, சீனாவைச் சேர்ந்தவர்கள். ஆக, தண்ணீர் பிரச்சினையின் தீவிரம் முன்பு நினைத்ததைவிட மிகவும் மோசம் என்கிறார் நெதர்லாந்தின் ட்வெண்டி பல்கலைக்கழகத்தின் நீரியல் மேலாண்மைக்கான பேராசிரியர் அர்ஜென் ஒய். ஹோக்ஸ்ட்ரா. பசி, பஞ்சம், பட்டினி ‘சயின்ஸ் அட்வான்ஸஸ்’ என்ற இதழில் இது

CONTINUE READING …

உலகம் தோன்றிய வரலாறு : ம. சிங்காரவேலர்

BY IN Article 1 COMMENT , , , ,

இன்றைய உலகம் எப்படி சிருஷ்டிக்கப்பட்டதென்றும், இவ்வுலகிலுள்ள பொருட்கள் எவ்வாறு உற்பத்தியாயிற்று என்பதைக் குறித்தும் இன்று மக்களுள் பலவிதமான அபிப்பிராய பேதங்கள் நிலவி வருகின்றன. இவற்றுள் இரண்டு விதமான அபிப்பிராய பேதங்கள் குறிப்பிடத்தக்கது. இவ்விரண்டில் ஒன்று, சென்ற பல ஆண்டுகளாக மக்களால் நம்பி அனுசரிக்கப்பட்டு வந்ததும், உலகிலுள்ள பல மதத்தின் கொள்கைகளைத் தழுவி அனுசரித்து வந்ததும், பைபிளின் ஆதியாகமத்தில் குறிப்பிட்டுள்ளதுமான உலக சிருஷ்டி கதையாகும். இரண்டாவது, சென்ற நூற்றாண்டிற்குள் பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதும், சென்ற பல நூற்றாண்டுகளில் பல

CONTINUE READING …

2012 டிச.21-ல் உலகம் அழியுமா

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , ,

1) நிறைய ஊடகங்கள் 2012 டிச.21-ல் உலகம் அழியும் என்கின்றனவே. அப்படி ஏதேனும் அபாயம் உள்ளதா? நமது பூமி 4பில்லியன் வருடங்களாக அருமையாக இயங்கி வருகிறது. உலகமுழுதும் உள்ள அறிவியல் அறிஞர்களுக்கு 2012-ல் எந்தவிதமான அபாயமுமில்லை என்று தெரியும். 2) 2012-ல் உலகம் அழியும் என்ற கருத்தின் மூலம் என்ன? சுமேரியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட நிபிரு என்ற கிரகம் பூமியை நோக்கி நகருவதாக கிளப்பப்பட்ட கதையிலுருந்து துவங்கியதுதான் இது. முதலில் இது 2003 ல்  நிகழும் என்றார்கள். பின்னர் அப்போது

CONTINUE READING …

உண்மையிலேயே உலகம் அழியப்போகிறது!

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , , ,

ஆம், உண்மையிலேயே உலகம் அழியப்போகிறது. நாசா அழியாது என்று உத்தரவாதம் கொடுத்தாலும், தமிழ்நாடு புதுவை அறிவியல் இயக்கத்தவர்கள் கூரை மீது நின்று உலகம் அழியது என கத்தோ கத்து என கூவினாலும். உலகம் அழியத்தான் போகிறது. டிசம்பர் 21 அழியபோகிறது என்று சொல்வது புரளி தான் .. வீண் வதந்தி தான். மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் ஏய்க்கும் செயல்தான். பீதி ஏற்படுத்தும் சமூக விரோத செயல்தான் என்றாலும் உள்ளபடியே உலகம் அழியத்தான் போகிறது, எப்படி அழியப்போகிறது, எப்போது

CONTINUE READING …