ஆதிகால மனிதனின் தொல் எச்சங்களில் ஒன்று குகை ஓவியம் ஆகும். கற்கால மனிதன் வரைந்தவை இவை. மலை, மலை இடுக்கு, பாறை கூறை முதலியவற்றில் ஆதிகால மனிதன் தனது ஓவியங்களை வரைந்தான். இந்த ஓவியங்கள் அந்தகால நடப்புகளை நமக்கு சுட்டிக்காட்டி நிற்கிறது. ஆதிகால மனிதனின் வாழ்வை நமக்கு உணர்த்துகிறது, மலைகுகைகள் தாம் கற்கால மனிதனின் உறைவிடமாக திகழ்ந்தது. குகைகள் சுற்றும் முற்றும் உள்ள பகுதியை விட சற்றே உயரமாக அமைந்தது. இதனால் மனிதன் கொடிய விலங்குகளிடமிருந்து தன்னை